விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி

94views

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு புல்சுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 13-19 என்று பின்தங்கிய தலைவாஸ் அணி பிற்பாதியில் எதிரணியை ஆல்-அவுட் செய்து 21-19 என்று முன்னிலை பெற்றது.

அதன் பிறகு 22-22 என்று சமநிலை வந்தது. தொடர்ந்து புள்ளிகளை குவித்த பெங்களூரு புல்ஸ் அணியினர் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்பினர். முடிவில் பெங்களூரு புல்ஸ் 38-30 என்ற புள்ளி கணக்கில் தலைவாசை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. அதிகபட்சமாக பெங்களூரு கேப்டன் பவன் செராவத் 9 புள்ளிகள் திரட்டினார்.

தனது தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சுடன் டிரா கண்டிருந்த தலைவாசுக்கு இது முதலாவது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 31-27 என்ற புள்ளி கணக்கில் மும்பையை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது. இன்னொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 31-28 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை வென்றது.இன்றைய லீக் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்- உ.பி.யோத்தா (இரவு 7.30 மணி), புனேரி பால்டன்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!