விளையாட்டு

புரோ கபடி: ஒரே நாளில் ‘டை’யில் முடிந்த 3 ஆட்டங்கள்

48views

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை அணி (யு மும்பா), உ.பி.யோத்தாவை எதிர்கொண்டது. இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது. முதல் பாதியில் மும்பை 16-13 என்று முன்னிலை பெற்றிருந்தது. பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட உ.பி.யோத்தா அணியினர் 24-24 என்று சமநிலைக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு 26-26, 28-28 என்றும் சமநிலை நீடித்தது. ஆட்டம் முடிய 41 வினாடிகள் இருந்த போது ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத இரு அணி வீரர்களும் தங்களது கடைசி ரைடுகளில் யாரையும் அவுட் செய்யாமல் வெறுமையுடன் திரும்பினர்.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!