தமிழகம்

நோய் வாய்பட்டு இறந்த மனைவியை, கணவர் தனியே தூக்கிச்சென்று புதைத்த சம்பவம் – போலீசார் விசாரணை

176views

ராமநாதபுரம்

முதுகுளத்தூர் அருகே நோய் வாய்பட்டு இறந்த மனைவியை, கணவர் தனியே தூக்கிச்சென்று புதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த காக்கூரை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது மனைவி அழகு (71). இவர்களுக்கு ஒரு மகள் உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், தம்பதியினர் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில, கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிபட்டு வந்த அழகு, கடந்த சனிக்கிழமை அன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவிக்காத மூக்காண்டி, சடலத்தை தானே தூக்கிச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தார். தகவல் அறிந்த கக்கூர் கிராம நிர்வாக அலுவலர் ராமையா, இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், நேற்று போலீசார், மயானத்தில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உடல்நல குறைவினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த அழகுவை யாரும் கவனிக்கவில்லை என்றும், மேலும் இறுதிச் சடங்கு செய்வதற்கு தன்னிடம் பணம் இல்லாததால், யாரிடமும் கூறாமல் சடலத்தை அடக்கம் செய்ததாக மூக்காண்டி தெரிவித்தார்.

பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் வயதான கணவர், தனியே மனைவி உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த சம்பவம், முதுகுளத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!