செய்திகள்தமிழகம்

நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலை

48views

நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 3-வது கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.கே.ராஜன் கூறியதாவது,

நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. நீட் குறித்து சிலர் விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

அனைத்து கருத்தகளும் ஆராயப்பட்ட பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்படும். அனைத்துக் கருத்துகளும் நன்கு ஆராய்ந்து ஒருமாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருக்கிறோம். ஆய்வு முடியாவிட்டால் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!