சினிமா

நயன்தாரா கேட்கும் சம்பளம்..தரமறுக்கும் தயாரிப்பாளர்.என்ன காரணம் தெரியுமா ?b

48views
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா கடந்த 17 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக திகழ்கின்றார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகின்றார்.
மேலும் ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நயன்தாரா முதன்மையான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வரும் நயன்தாரா தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படமான ஜவான் படத்தில் நாயகியாக நடிக்கின்றார் நயன்தாரா. இப்படத்தில் நயன்தாராவிற்கு சம்பளமாக ஐந்து கோடி பேசப்பட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து நயன்தாரா தமிழில் தனது 75 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார்.
அதாவது பாலிவுட் திரையுலகில் பிரபல நாயகியான தீபிகா படுகோனே தான் பத்து கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதே சமயம் நயன்தாரா தான் தயாரிக்கும் படங்களை தவிர மற்ற தயாரிப்பாளர்களின் படங்களின் ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை.
எனவே அவருக்கு பத்து கோடி சம்பளம் தர முடியாது என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறிவிட்டாராம். இதன் காரணமாக நயன்தாரா அப்சட்டில் இருப்பதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!