சினிமா

துபாயில் நடைப்பெற்ற நண்பன் – இருமொழி ஆல்பத்தின் இசை வெளியீடு

190views
தமிழ்-மலையாளம் இரண்டு மொழிகளில் எழுதப்பட்டு இரண்டு மொழி பாடகர்களால் பாடப்பட்டு ஒற்றை இசை அமைப்பாளரின் நேர்த்தியான இசையில் நண்பன்- தனிப்பாடல் இசை வெளியீடு தீபாவளி தினம் அன்று துபாயில் கோலாகலமாக னநடைபெற்றது.
தமிழில் பாடல் வரிகளை கவிஞர் ம.ராஜாவும், மலையாளத்தில் வரிகளை ரஞ்சனி வர்மாவும் எழுத
தமிழில் கோகுல் பிரசாத்தும், மலையாள வரிகளை அனிருத் அரவிந்தும் பாடி இருக்கின்றனர்.
இந்த இசை ஆல்பத்தை இசையமைத்து இயக்கி இருக்கிறார் பிரதீப் பாபு.
GP ஸ்டுடியோஸ் புரொடக்க்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் P.பிரசாத்குமார் தயாரித்திருந்த இந்த இசைஆல்பத்தின் வெளியீட்டில் திரைபிரபலங்கள், மீடியா நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆல்பம் மாபெரும் வெற்றிப்பெற நான் மீடியாவின் வாழ்த்துக்கள்.

பாடலை கண்டு ரசிக்க இணைப்பு சுட்டி:

https://www.youtube.com/watch?v=r4UDpYVVtNs

Right Click & View Source is disabled.

error: Content is protected !!