ஜி7 தலைவர்களுடன் பைடன் ஆலோசனை
42
உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி 7 நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி7 கூட்டமைப்பின் தலைவர்களுடன் ஜோ பைடன் இந்த விவகாரம் குறித்து காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, உக்ரைன் தாக்குதல் குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தையும் அதிபர் ஜோ பைடன் நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஜி7 தலைவர்களுடன் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவை அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை அறிவிக்க உள்ளார்.