விளையாட்டு

செஸ் : உலகின் நம்பர் 1 வீரரை தோற்கடித்த 16 வயது தமிழன்

97views

சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில் தற்போது நடைபெற்று வருகிறது . இதில் இந்தியா தரப்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்யானந்தா பங்கேற்றுள்ளார் .

ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா , 2 போட்டிகளை டிரா செய்தார் . மற்ற போட்டிகள் தோல்வியில் முடிந்தன .

ஆட்டத்தின் 39 ஆவது நகர்வின்போது , மேக்னஸ் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார் . 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரை , சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவர் தோற்கடித்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் 16 சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர் . வெற்றி பெறும் ஒவ்வொரு வீரருக்கும் 3 புள்ளிகளும் , டிரா செய்வோருக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படும் . முதல் சுற்று முடிவதற்கு இன்னும் 7 ஆட்டங்கள் உள்ளது .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!