இந்தியா

சர்வதேச பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும்; மத்திய அரசு அறிவிப்பு

69views

டிசம்பர் 15-ஆம் தேதி முதல், சர்வதேச பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, சில கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல், சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கொரோனா பரவல் அதிகம் உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு

விமானங்கள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மேற்குறிப்பிட்ட 14 நாடுகளை தவிர மற்ற நாடுகளுக்கு சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் எனவும், இந்த சேவை அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!