செய்திகள்விளையாட்டு

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லியில் கைது

63views

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டை கொலை செய்த வழக்கில் சுஷில் குமார் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், சுஷில் குமாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பி ஒடினார். மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தான்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார்.

ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து, சாகர் தான்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக போலீஸார் மாற்றி மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீசார் தேடி வந்தனர். மல்யுத்த வீரர் சுஷில் குமார் இருப்பிடம் குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்தனர். சுஷில் குமாரை போலீசார் தொடர்ந்து திவிரமாக தேடி வந்த நிலையில், இன்று டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு, சுஷில் குமார் கைது செய்யப்பட்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!