சினிமா

கேங்ஸ்டராக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன்

49views

கோலிவுட்டில் அம்மா கதாபாத்திரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நடிகை சரண்யா பொன்வண்ணன் தான். தற்போது இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கம் புதிய படத்தில் முன்னனி கதாநாயகியாக இவர் நடிக்கிறார்.இது குறித்து இயக்குனர் கூறியதாவது : “சரண்யா பொன்வண்ண ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதை உடைக்க விரும்பினேன், அதனால் கேங்ஸ்டராக நடிக்க வேண்டும் என சரண்யா அவர்களை அணுகினேன்.

இந்த கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக இருப்பார் என்று அவரிடம் கூறினேன். இந்தப் படத்தில் ராஜ் வர்மா வில்லனாகவும், அம்சத் கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினருக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது சரண்யா கேங்ஸ்டர் வழியை கையில் எடுக்கிறார் என்பது தான் கதை” என்றார் .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!