இந்தியா

காங்., நிகழ்ச்சிக்கு உ.பி.,யில் தடை

46views

லக்னோ-உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில சட்ட சபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.

பெண்களை கவரும் நோக்கில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, ‘நான் பெண்; போராடுவேன்’ என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளார்.இதையொட்டி லக்னோ மற்றும் ஜான்சியில் பெண்கள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டத்துக்கு காங்கிரஸ் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா பரவலை காரணம் காட்டி லக்னோவில் இந்த போட்டியை நடத்த நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. ஆனால் ஜான்சியில் மாரத்தானுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இது குறித்து பிரியங்கா கூறியதாவது:மாநில அரசு நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடுகளை சிறிதும் கடைப்பிடிக்காமல் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஆனால் லக்னோவில் பெண்கள் மாரத்தானுக்கு தடை விதித்தது, அரசின் பாரபட்ச நடவடிக்கையை தான் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!