கனமழை காரணமாக, 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.,26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது.
வரும் 28ம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை* சென்னை* மயிலாடுதுறை* தேனி* திண்டுக்கல்* விருதுநகர்* தென்காசி* திருநெல்வேலி* தூத்துக்குடி* தஞ்சாவூர்* அரியலூர்* பெரம்பலூர்* நாகை* புதுக்கோட்டை* கடலூர்* கன்னியாகுமரி* விழுப்புரம்* திருவாரூர்* திருச்சிபள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை* மதுரை* சிவகங்கை* ராமநாதபுரம்* கள்ளக்குறிச்சி* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* திருவள்ளூர்* திருவண்ணாமலை* நாமக்கல்2 நாட்கள் விடுமுறைபுதுச்சேரி, காரைக்காலில், கனமழை காரணமாக, இன்றும், நாளையும் (நவ., 26, 27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.