தமிழகம்

ஒரே நாளில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்துவைப்பு

39views

தமி­ழ­கத்­தில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­களை பிர­த­மர் மோடி நேற்று திறந்து வைத்­தார்.

திறப்பு விழா­வுக்கு வர இய­லாத கார­ணத்­தால் காணொளி வசதி மூலம் அவர் திறப்பு விழா­வில் பங்­கேற்­றார். மருத்­து­வக் கல்­லூரி இல்­லாத 11 மாவட்­டங்­களில் இந்த கல்­லூ­ரி­கள் கட்­டுப்­பட்­டுள்­ளன.

இந்­நி­கழ்­வில் பேசிய பிர­த­மர் மோடி, ஒரு மாநி­லத்­தில் ஒரே நேரத்­தில் 11 மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் திறக்­கப்­ப­டு­வது இதுவே முதல்­முறை என்­றார்.

முன்­ன­தாக, உத்­த­ரப் பிர­தே­சத்­தில் ஒரே நாளில் ஒன்­பது மருத்­து­வக் கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்­டதே சாத­னை­யாக இருந்­தது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­தி­யா­வில் 387ஆக இருந்த மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளின் எண்­ணிக்கை, பாஜக ஆட்­சிக்கு வந்­த­பின் 596ஆக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் முந்­தைய மத்­திய அரசு மருத்­து­வம் சார்ந்த படிப்­பு­களை ஊக்­கப்­ப­டுத்த எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்­றும் பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்தில் இருந்து தமிழகத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

“2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில், பின்தங்கிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன் பலனாக, இன்று அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் என்ற காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு நிறைவேறி உள்ளது.

“இன்று நமது நாட்டிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிக அதிக எம்பிபிஎஸ் இடங்களையும் மருத்துவ மேற்படிப்பு இடங்களையும் கொண்டு, மருத்துவத் துறையில் நாட்டிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!