விளையாட்டு

ஒருநாள் போட்டி; இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

100views

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் முதல்போட்டி கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில், 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகனர்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 85 ரன்களை குவித்தார். பின்னர் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 48 புள்ளி 1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் மாலன் 91 ரன்கள் குவித்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!