விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏடிகே மோகன் பகான் அணி வெற்றி

46views

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் மற்றும் பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி மோகன் பகான் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி சார்பில் லிஸ்டன் கோலகோ ஆட்டத்தின் 45+2 வது நிமிடத்திலும் மன்விர் சிங் ஆட்டத்தின் 85 வது நிமிடத்திலும் என தலா ஒரு கோல் அடித்தனர். பெங்களூரு அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதையடுத்து ஏடிகே மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!