விளையாட்டு

ஐபிஎல்; விராட் கோலி உள்பட 3 வீரர்களை தக்க வைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

59views

அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு ஆமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஜனவரி மாதம் வீரர்களின் மெகா ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்க வைக்க ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு அனுமதி அளித்துள்ளது. தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதன்படி, அனைத்து அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தக்க வைத்துள்ள வீரர்கள் விவரம் முதலில் வெளியானது. பெங்களூரு அணி விராட் கோலி (15 கோடி) , மேக்ஸ்வெல் (11 கோடி) , முகம்மது சிராஜ் (7 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது. விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்க போவது இல்லை என அறிவித்து விட்டதால், பெங்களூரு அணியின் கேப்டனாக யார்? நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!