விளையாட்டு

ஏடிபி டென்னிஸ் சாம்பியன்ஷிப் – கோப்பையை வென்றார் ஸ்வெரேவ்

67views

ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்வடேவும், ஒலிம்பிக் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதினர்.

இதில், ஸ்வெரேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் மெட்வடேவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ஏடிபி இறுதிச்சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வெரேவ் பெறும் இரண்டாவது டைட்டில் இதுவாகும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!