சினிமா

என் குறும்படம் ஆஸ்கர் விருது பெற வேண்டும் என வேண்டினேன்

51views

நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம்…திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார்.

சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன், வருடாவருடம் பிறந்தநாளன்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் என தெரிவித்தார்.

மேலும், தான் மூன்றாவது முறை தேசிய விருது பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், தான் இயக்கியுள்ள முதல் குறும்படமான ‘இரவின் நிழல்’ ஆஸ்கார் விருது பெற ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவரை சூழ்ந்து கொண்ட அவரது ரசிகர்கள் புகைப்படமெடுத்து மகிழ்ந்தனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!