உக்ரைன் விவகாரம்: இன்று ஐ.நா., பொதுசபை கூட்டம்
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நீடித்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா., பொதுசபை கூட்டம் கூடுகிறது.
ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் இன்று நியூயார்க்கில் அவசர கூட்டமாக கூடுகிறது. 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஐ.நா., பொதுசபை கூட்டம் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது.
அவசர கூட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 11 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில் ரஷ்யா எதிர்த்து வந்தது. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வாக்களிப்பில் பங்களிக்கவில்லை.
இந்நிலையில் ரஷ்யா பிடிக்கக் கூடிய இடங்கள் எதுவும் அங்கீகரிக்கப்படாது என ஜி7 அமைப்பு அறிவித்துள்ளது.