78views
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளர் செஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்றைய தினம் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தெரிவித்திருந்த கருத்து காரணமாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.