இலங்கையில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி
இலங்கையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆறு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடான இலங்கையில், திரிகோணமலை மாவட்டத்திலிருக்கும் கின்னியா மற்றும் குரின்சகேனி இடையே படகு போக்குவரத்து நடக்கிறது.புதிய பாலம்இவ்வழியே, குருனன்கேனி என்ற இடத்தில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. நேற்று, இப்பாலம் அருகே, 20 பயணியருடன் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதையடுத்து படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் இலங்கை கடற்படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நீரில் மூழ்கி இறந்த ஆறு மாணவர்களின் உடல்களை மீட்டனர். உயிருக்கு போராடிய மேலும் மூன்று மாணவர்கள் உட்பட, 11 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விசாரணைஅவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. படகு விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.