விளையாட்டு

இந்தியா தோற்றது எப்படி? 5 முக்கிய காரணம் இதோ…எதிர்பாராத ட்விஸ்ட்கள்!

35views

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்ற நிலையில், அதில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி, ஜோகனஸ்பர்க்கில் துவங்கி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றால், இந்திய அணி தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துவிடும் என்பதால், இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், இந்திய அணி படுமோசமாக சொதப்பி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 202/10 ரன்கள் அடித்த நிலையில், அடுத்துக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 229/10 ரன்கள் எடுத்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா 266/10 அடித்து, தென்னாப்பிரிக்காவுக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 243/3 ரன்கள் அடித்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு 5 முக்கிய காரணங்கள் இருக்கிறது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்.

இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, முதுகு வலி பிரச்சினை காரணமாக, இரண்டாவது டெஸ்டில் ங்கேற்கவில்லை. இவர் பார்ம் அவுட்டில் இருக்கிறார் என்றாலும்கூட, ஜோகனஸ்பர்க் மைதானத்தில் 2 போட்டிகளில் 300+ ரன்கள் அடித்திருந்ததால், இரண்டாவது போட்டியில் நிச்சயம் அரை சதமாவது அடித்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், அனுபவமிக்க கேப்டனும் கூட. வீரர்களுக்கு, குறிப்பாக பௌலர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் அளித்து வரக் கூடியவர். அனுபவமிக்க கேப்டன் என்பதால், திடீரென்று ஆட்டத்தின் போக்கையே மாற்றி காட்டக் கூடியவர் என்பதை நாம் முன்பு பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம்.

இந்திய அணி சரிவு காணும் போதெல்லாம், அதிரடியாக விளையாடி ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்துவார் என்ற நம்பிக்கையில்தான் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவது பந்திலேயே இறங்கி வந்து அடித்து, டக் அவுட் ஆனார். இதனால், இந்தியாவால் பெரிய ஸ்கோர் எட்ட முடியவில்லை.

போட்டியின்போது சிராஜிற்கு ஏற்பட்ட காயம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. சமீபத்தில் இந்தியாவில், சுழலுக்கு சாதகமான மைதானத்தில் அபாரமாக பந்துவீசி நியூசிலாந்தை திணறடித்தார். தற்போது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் இவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. காயம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.

பும்ரா பேட்டிங் செய்தபோது மார்கோ யான்சென், தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி அச்சுறுத்தினார். அப்போது இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸின்போது விக்கெட் எடுப்பதற்கு பதிலாக ஷார்ட் பால், யாக்கர் போன்றவைகளை வீசி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தப் பார்த்தார். லெந்த் பால்களை அவ்வளவாக வீசவில்லை. இதனால், தென்னாப்பிரிக்கா சுலபமாக ரன்களை குவித்தது.

ஓபனர்கள் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் ஆட்டமிழந்துவிட்டால் அவ்வளவுதான். அடுத்தடுத்து விக்கெட்களை சுலபமாக வீழ்த்திவிடலாம் என்ற அளவில்தான் இந்திய அணியின் பேட்டிங் நிலை இருக்கிறது. புஜாரா, ரஹானே ஆகியோர் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் இருவரும் படுமோசமாக சொதப்பினார்கள். அடுத்த போட்டியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் கவனமாக விளையாடினார்கள். இவர்கள் முதல் இன்னிங்ஸிலும் சிறப்பாக சோபித்திருந்தால், இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்காது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!