இந்தியா

இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் ஒமிக்ரான் வைரஸ்.! மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி.! பாதிப்பு எண்ணிக்கை உயர்வு.!

42views

வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிரா வந்த மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் தொற்று போட்ஸ்வானா, ஹாங்காங், இங்கிலாந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிவேகமாக பரவிவருகிறது. ஒரே வாரத்தில் பெரும்பாலான நாடுகளில் பரவியதால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவில் நேற்று வரை ஆந்திரா, சண்டிகர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 41 பேருக்கு ஒமைக்ரான் தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோல, தலைநகர் டெல்லியில் நேற்று 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45ஆக உயர்ந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே ஒமிக்ரான் காரணமாக பிரிட்டனில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “விரைவில் ஒமிக்ரான் மூன்றாம் ஏற்படக்கூடும். மேலும் இதற்கு எதிராக போடப்பட்ட 2 டோஸ் கொரோனோ தடுப்பூசிகளும் பயன் அளிக்காது” என தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!