விளையாட்டு

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : இறுதி போட்டிக்கு முன்னேறினார் ரபெல் நடால்

90views

பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த  கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7-6 (7-0), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ்சை போராடி வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.

இந்த நிலையில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் அவர் சக நாட்டு வீரரான அல்கராஸ் கார்ஃபியாவுடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நடால் 6-4, 4-6, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!