தமிழகம்

அ.தி.மு.க., கூட்டணி தொடரும்: அண்ணாமலை அறிவிப்பு

51views

‘அ.தி.மு.க.,வுடன் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக உள்ளோம்.

கூட்டணி தொடரும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தி.மு.க., அரசு திட்டமிட்டு அ.தி.மு.க.,– பா.ஜ., நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிக்கிறது, சமீபத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அகோரம் என்பவரை கைது செய்ய, 250 போலீசாரை அனுப்பி மிரட்டல் விடுத்தது.குற்றச்சாட்டுகளை கண்டு தி.மு.க., அஞ்சுகிறது. தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறி விட்டு, தற்போது தி.மு.க., ஏமாற்றுகிறது. பொய் சொல்லி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க., வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. வேளாண் சட்டங்கள் குறித்து காங்., உள்ளிட்ட சில கட்சிகள் தவறாக பிரசாரம் செய்து, விவசாயிகளை நம்ப வைத்து விட்டன.

ஒரு காலம் வரும். அப்போது, ‘வேளாண் சட்டம் வேண்டும்’ என, விவசாயிகள் கேட்பார்கள்.அ.தி.மு.க.,வுடன் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக உள்ளோம். கூட்டணி தொடரும். மேற்கு வங்கத்தில் மம்தா அரசு, பா.ஜ., தொண்டர்களை கொன்று வருகிறது. கேரளாவில் 266 பா.ஜ.,வினர் கம்யூனிஸ்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!