அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவு
196
அருணாச்சலப் பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் பாங்கின் நகருக்கு வடக்கே 1176 கிலோமீட்டர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6:56 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த “நிலநடுக்கம்” ரிக்டர் அளவுகோலில் 5.3 எனப் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் சேத விவரங்கள் குறித்த முழுமையான எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.