மதுரையில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து பணியாளர் பலி.. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்களால் உடல் மீட்பு..
59
மதுரை மாநகர் பகுதியான கூடல் நகர் அருகே அசோக் நகர் என்கின்ற தெருவில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலியாகினார்.
இதனை தொடர்ந்து அவரை மீட்கும் பணியில் தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தீயணைப்பு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். மதுரையில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழியில் விழுந்து பணியாளர் பலி.. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்களால் உடல் மீட்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்