தமிழகம்

என்னை கேட்காம மோடி ஸ்கீம்ல வீடு கட்டக்கூடாது, நான் தான் கவுன்சிலர், வாயை உடைச்சுருவேன் இளைஞருக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் கணவர்.

757views
மதுரை மாநகராட்சி 41ஆவது வார்டுக்கு உட்பட்ட பகலவன்நகர் பூக்கார தெரு பகுதியில் உள்ள வயதான தம்பதியினர் ஒருவர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வீடு கட்டியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் வீட்டிற்கு தேவையான பாதாளசாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.
அப்போது அந்த வீட்டிற்கு சென்ற 42ஆவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரின் செல்வியின் கணவர் கார்மேகம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வயதான தம்பதியினர் தனது மகனிடம் பேசிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து தம்பதியினரின் மகன் திமுக கவுன்சிலரின் கணவரை தொடர்புகொண்டு பேசியபோது : நான் தான் கவுன்சிலர் என கூறும் போது இது 41வது வார்டு என இளைஞர் பதிலளித்துள்ளார்.
இல்லை அது 42ஆவது வார்டாக மாறிருச்சு நான்தான் கவுன்சிலர் என கூறியதோடு பிரதமர் ஸ்கீம்ல வீடு கட்டும் போது என்ட கேட்காம எப்படி கட்டுன என மிரட்டி பேசியதோடு, எந்த வீடு கட்டினாலும் கவுன்சிலர் என்னிடம் சொல்லனும் என பேசியதோடு, நேரில் வந்துட்டு போ என பேசியதோடு நேரில் வரும்போது உன்னுடைய வாயை உடைப்பேன் என மிரட்டியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவரான ஸ்டாலின் தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என புலம்பி அறிவுறுத்தியும் கூட அதனை திமுகவினர் சற்றும் கண்டுகொள்ளாத நிலையில் நாள்தோறும் திமுகவினர் தனது அராஜகங்களை கட்டவிழ்த்துவிட்டுவருவதற்கான மேலும் ஒரு ஆதரமாக திமுக கவுன்சிலரின் கணவர் தானே கவுன்சிலர் என கூறி இளைஞரை மிரட்டிய சம்பவம் அமைந்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!