தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு ரூ 4 கோடி மதிப்பீட்டில் தங்க கவசம்

137views
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலைய 4-வது மகா கும்பாபிஷேக பெருவிழா வரும் 25-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.  கோயில் கொடிமரம், மற்றும் கலசங்கள், மூலவர் ஆகியயோருக்கு சுமார் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் தங்க மூலாம் பூசப்பட்ட கொடிமரம் முழுவதும், சிறிய, பெரிய கலசங்கள் மூலவர் என ரூபாய் 4 கோடியில் அமைக்க விறுவிறுப்பாக பணி நடைபெற உள்ளது.  தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்து தகடு, கலசம் ஆகியவற்றை பூஜை செய்து கோயில் நிர்வாகிகள் எடுத்து சென்றனர்.

இந்த பூஜையில் தலைவர் கலவை சச்சிதானந்த சுவாமிகள், செயலாளர் சுரேஷ்குமார், துணைத் தலைவர்கள் தர்மலிங்கம், அச்சுதானந்தம், வெங்கடசுப்பு, கும்பாபிஷேக தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் எடுத்து சென்றனர்.  கும்பாபிஷேக ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!