தமிழகம்

வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி ஓபிசி தலைவராக நோபல் விலிங்ஸ்டன் மீண்டும் தேர்வு : மாநில தலைவர் அறிவிப்பு

69views
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி மாநில தலைவர் டி.ஏ.நவீன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி. யின் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் 2013 – 2024-ம் நிர்வாகிகளின் புதிய பட்டியலை அகில இந்திய ஓபிசி தலைவர் கேப்டன் அஜய்சிங்கின் ஒப்புதலோடு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.  அதில் வேலூர் மாவட்ட மாநகர ஓ.பி.சி தலைவராக காட்பாடி காந்திநகரை சேர்ந்த நோபல் லிவிங்ஸ்டன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தமிழ்நாடுநர்சரி, பிரைமரி மெட்ரிக், ஹையர் செகண்ட்ரி பள்ளிகள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர் டாக்டர் டி.ராஜசேகர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் வேலூர் மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர்கள் வாசுதேவன், வாரியார் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!