தமிழகம்

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை தமிழ்நாடு அரசு விரைந்து விசாரிக்க வேண்டி வேலூரில் ஓபிஎஸ்அணி, அமமுகவினர் ஆர்ப்பாட்டம்

101views
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக சார்பில் கோடநாடு கொலை,கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டி தமிழக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓபிஎஸ் அணி மாவட்ட அவைத்தலைவர் தவசீலன் தலைமை தாங்கினார்.  மாவட்ட (ஒபிஎஸ்) அதிமுக செயலாளர் முரளி, மாநகர செயலாளர் அப்பு பாலாஜி, அமமுக சார்பில் மாநகர செயலாளர் எஸ்.ராஜா, மாநில எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ஏ.எஸ்.ராஜா, தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் சதீஷ்குமார், காட்பாடி ஒன்றிய செயலாளர் சந்தர் கணேஷ் உள்ளிட்ட அதிமுக ஓபிஎஸ் அணி, அமமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!