தமிழகம்

வேலூர் அருகே திமுக ஒன்றிய செயலாளரை போனில் மிரட்டிய டூபாக்கூர் ஐஏஎஸ் நபர் கைது

28views
வேலூர் மாவட்டம் கணியம்பாடி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக இருப்பவர் கஜேந்திரன். இவருக்கு அடையாளம் தெரியாத நபர் நான்சென்னை தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளேன். உங்களைப் பற்றி நிறைய புகார்கள் வந்து உள்ளது. இதுகுறித்து விசாரிக்கவேலூர் அடுத்த அடுக்கம்பாறை சாத்துமதுரையில் வந்து சந்திக்கும்படி மிரட்டியுள்ளான்.
பிறகு கஜேந்திரன் மற்றும் 2 பேருடன் சந்தித்தபோது தன்னை என்.சுபாஸ் ஐஏஎஸ், அரசின் உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர், தலைமை செயலகம் என்ற விசிட்டிங் கார்டை காண்பித்து உள்ளான்.
பிறகு, என்னை சென்னையில் சந்திக்கும் படி, மிரட்டி சென்று உள்ளான்.  சந்தேகம் அடைந்த கஜேந்திரன் இதுகுறித்துவேலுார் எஸ்.பி. மணிவண்ணனிடம் புகார் அளித்தார். வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு தலைமையில் அதிரடியாக சென்னை விருகம்பாக்கத்தில் பதுங்கி இருந்த சென்னையை சேர்ந்த சுபாஷ் என்பதும் இவன் போலியாக விசிட்டிங் கார்டு, செல்போன் எண்களை பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்தது. பின் சுபாஸ் என்ற டூபாக்கூர் நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!