தமிழகம்

வேலூரில் 106.7 டிகிரி வெய்யில், பொதுமக்கள் கடும் அவதி!

64views
வேலூர் மாவட்டத்தில் மே மாதம் கடும் வெய்யில் தாக்கம் இருந்தது. அக்னி நட்சத்திரம் துவங்கிய நாளில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்துவந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெய்யிலின் தாக்கம் இருந்தது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 14-ம் தேதி 41.5 டிகிரி செல்சியல் அதாவது 106.7 டிகிரி பாரன்ஹீட்டாக வெய்யில் பதிவானது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க வீட்டில் முடங்கி இருந்தனர். அவசர வேலையாக சென்றவர்கள் வெய்யிலின் கொடுமையை அனுபவித்தார்கள்.
106.7 டிகிரி வெய்யில் இந்த ஆண்டில் அதிகமாக ஞாயிற்றுக்கிழமை பதிவானது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!