தமிழகம்

பொன்னையில் இருசக்கர வாகனத்தில் ரேசன் அரிசியை கடத்தியவர் கைது

24views
வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி பறக்கும் படையினர் மற்றும் காவல் குற்றப்புலனாய்வு துறை இணைந்து காட்பாடி தாலுகா பொன்னை கூட்ரோட் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 152 கிலோ ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது.  பறக்கும் படை தாசில்தார் விநாயகமூர்த்தி, கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம், ரேசன் அரிசியை கைப்பற்றி கடத்திய சோளிங்கர் அடுத்த கொண்ட பாளையத்தை சேர்ந்த சிலம்பரசனை (34) கைது செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!