தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியார்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

32views
வேலூர் அடுத்த வள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் மாநில அலுவலகத்தில் வேலுர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.  மாவட்ட தலைவர் கா.ரமேஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் தாண்டவ மூர்த்தி, முனுசாமி, முத்துசாமி, மனோகரன் மதன்குமார், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் வி.ஜெயபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில கவுரவ தலைவர் சி.ராஜவேலு கலந்துகொண்டார்.
தமிழக அரசு தற்போது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிராக செயல்படுகிறது அதை மாற்றிகொண்டு சில சலுகைகளை அறிவிக்கவேண்டும்.8-வது ஊதியக்குழு அமைப்பது பற்றி தற்போது சட்டமன்ற கூட்டத்திலேயே அறிவிக்கவேண்டும், தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பேரூராட்சி பணியாளர்கள், தோட்டக்கலைப்பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியார்களுக்கு கூலி உயர்வு மற்றும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!