தமிழகம்

வேலூர் கோட்டை மைதானத்தில் 3-ம் ஆண்டு அரசின் புத்தக திருவிழா துவக்கம் ! 30-ம் தேதி நிறைவு விழா !!

62views
வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நூலகத்துறை சார்பில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது.  வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி வரவேற்றார். ஆட்சியர் சுப்புலெட்சுமி விழா தலைமையுரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு, மாநகராட்சி ஆணையர் ஜானகி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.முன்னதாக கண்காட்சியை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி ஆட்சியர் துவக்கிவைத்தார். இந்த கண்காட்சி தொடர்ந்துவரும் 30-ம் தேதி வரை நடக்கிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!