தமிழகம்

வேலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது

33views
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (25). இவன் இதே பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகின்றான்.  இவனும் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும்  15வது சிறுமியும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர்.  கடந்த 22-ம் தேதி இருவரும் ஊரைவிட்டு வெளியேறிய நிலையில் கடந்த 23-ம் தேதி விஸ்வநாதன்தன் நண்பர்களுடன் குடியாத்தத்தில் திருமணம் செய்து உள்ளான்.
பிறகு வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.  பின் குடியாத்தம் பஸ் நிலையத்தில் மறுநாள் விட்டு, சென்று உள்ளான்.  தன் செல்போன் மூலம் அந்த சிறுமி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.  பின்பு வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  மகளிர் காவலர்கள் விசுவநாதன் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!