தமிழகம்

பொது இடத்தில் மது அருந்திய 4 ரௌடிகள் அதிரடியாக கைது!

133views
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  இ.திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மது அருந்திக் கொண்டிருந்த ரௌடிகள் சஞ்சய், சின்னா, நிவாஸ் மற்றும் நந்தகுமார் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதுபோன்று பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!