தமிழகம்

பேர்ணாம்பட்டு அரசு பஸ் டெப்போவில் டிரைவர், கண்டக்டர் தீ குளிக்க முயற்சி !

107views
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிப்போ உள்ளது.  இதில் பேர்ணாம்பட்டு- சென்னை வழித்தடத்தில் பஸ் டிரைவர் தேவராஜ்,  கண்டக்டர் பாபு ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.  அவர்களுக்கு திங்கள்கிழமை காலை பணி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் டீசல் பாட்டிலை வைத்து கொண்டு தீ குளிக்க முயன்றனர்.
பேர்ணாம்பட்டு காவல்துறையினர், போக்குவரத்து உயர் அதிகாரிகளுடன் பேசி சமாதானம் செய்தனர்.  அதற்கு முன்பாக டிரைவர், கண்டக்டர் இருவரும், கிளை மேலாளர் வெங்கடேசனை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!