தமிழகம்

கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட 2500 மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது

103views
வேலூர் மாவட்டம் காப்பாடி அடுத்த பொன்னையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.  அப்போது கர்நாடகாவிலிருந்து பொன்னையை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்த முயன்றபோது அது நிற்காமல் சென்றது.  இதனை துரத்தி சென்று மடக்கிபிடித்த காவல்துறையினர் காரை சோதனை செய்தபோது 35 அட்டை பெட்டியில் 2496 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  பின்னர் சித்தூர் தர்கா பகுதியை சேர்ந்த வினோத்குமார்(32) பொன்னையை சேர்ந்த ஆனந்தராஜ் (40) என்பது தெரியவந்தது.  இந்த 2 பேரை கைது செய்த காவல்துறை, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!