தமிழகம்

பேர்ணாம்பட்டு மலைகிராம பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸ் சில் குவா! குவா!

36views
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பஸ்மார்பண்டா மலை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் கூலி தொழிலாளியின் மனைவி கிருஷ்ண வேனி (25) யின் பிரசவ வலிக்காக 108 ஆம்புலன்ஸ் சில் டி.டி. மோட்டூர் பகுதியிலிருந்து அழைத்து சென்று கொண்டு இருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது மருத்துவ உதவியாளர் வெங்கடேசன், ஓட்டுநர் ஜெயக்குமார் விரைந்து பெண்ணிற்கு முதலுதவி அளித்து ஆம்புலன்சில் பிரசவம் பார்த்தனர். பின்பு அருகில் இருந்த பேர்ணாம்பட்டு நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். தாயும் பிறந்த பெண் குழந்தையும் நலமாக உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!