தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநல்லூர் அரசு கிருபானந்த வாரியார் பள்ளியில் +2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் மகிழ்ச்சி !!

75views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் அரசினர் கிருபானந்தவாரியார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1990-ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் 34 ஆண்டுக்கு பிறகு காட்பாடி ஸ்ரீ லட்சுமிபவன் ஹோட்டல் மினி ஹாலில் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
இதில் 90-ம் ஆண்டு மாணவர்களான விஐடி ஊழியர் வனிதா, திருவள்ளூவர் பல்கலைக்கழக ஊழியர் சசிக்குமார், பத்திரிக்கையாளர் மோகன், முன்னாள் இராணுவ வீரர் நெடுமாறன், ரேடியோகிராபர் எர்னஸ்ட் இன்பராஜ், வேலூர் மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், பிரம்மபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகழ் வேந்தன், வழக்கறிஞர் அம்மையப்பன், தனியார் அலுவலர் சங்கர் கணேஷ், தலைமை ஆசிரியை ஜெயந்தி பூங்கொடி, இல்லத்தரசிகள் சாந்தி, இந்திரா, சிஎம்சி ஊழியர் ராமு, எல்ஐசி கரிகாலன், பால் கூட்டுறவு சங்கம் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!