தமிழகம்

வேலூரில் திடீரென காற்றுடன் ஆலங்கட்டி மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

50views
வேலூரில் பகல் நேரத்தில் கடும் வெய்யில் பொதுமக்களை வாட்டி எடுத்தது.  வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் காற்றுடன் கூடிய திடீர் மழை பெய்ய ஆரம்பித்தது.  ஆலங்கட்டியுடன் கூடிய மழை சுமார் 20 நிமிடம் மழை பெய்தது.
ஒரு சில இடங்களில் சிறிய மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.  சாலைகளில் தண்ணீர் தேங்கியது.  இதமான குளிர்ந்த காற்று வீசியது.  கடும் வெப்பத்திலிருந்து வேலூர் மக்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்கள்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!