தமிழகம்

வேலூர் குவாரி குட்டையில் மூழ்கி பரிதாபமாக 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு !!

37views
வேலூர் அடுத்த வள்ளலார் பகுதியை சேர்ந்த பாலாஜியின் மகன் சரவணன் (15), மதன்குமாரின் மகன் அவினாஷ் (15). இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இவர்கள் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை விளையாட சென்று விட்டு மாலை 3 மணிக்கு மேல் பெருமுகை மலை அடிவாரத்தில் உள்ள செயல்படாத கல்குவாரி குட்டைக்கு சென்று குளித்து உள்ளனர்.
ஓரமாக குளித்து கொண்டு இருந்த சரவணன், அவினாஷ் ஆகியோர் ஆழமான பகுதியில் மூழ்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர் கூச்சல் போட்டனர். சிறுவர்களின் சத்தத்தை கேட்டு, அவ்வழியாக சென்று கொண்டு இருந்தவர்கள் மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை, இது குறித்து தகவல் அறிந்த காவல் மற்றும் தீயணைப்புதுறையினர் போராடி 2 மணி நேரத்திற்கு மாணவர்களின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் இறந்த மாணவர்களின் குடும்பத்தினரிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!