தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் மாநகராட்சி சார்பில் மலேரியா விழிப்புணர்வு !!

67views
வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரப்படி மாநகராட்சி ஆணையர் பானுமதி அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் உலக மலேரியா விழிப்புணர்வு மாதம் கொண்டாடப்பட்டது.

மாவட்ட மலேரியா அலுவலர் முனுசாமி, பூச்சியில் வல்லுநர் காமராசு மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு மலேரியா நோயை பரப்பக் கூடிய கொசுக்களைப்பற்றி விளக்கமாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி தாளாளர் லில்லிகிரேஸ், மாநகராட்சி சுகாதார மேலாளர் சரவணன், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாணவ – மாணவிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!