தமிழகம்

வேலூர் அதிமுக பாராளுமன்ற அறிமுக கூட்டத்தில் வீராப்பு வசனம் பேசிய மாவட்ட செயலாளர்கள் !!

99views
வேலூர் பாராளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளராக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பூங்குளத்தை சேர்ந்த மருத்துவர் பசுமதி அறிவிக்கப்பட்டார்.
வேலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் பசுபதியின் அறிமுக கூட்டம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி. வேலூர் மாநகர செயலாளர் எஸ்ஆர்கே. அப்பு, புறநகர் மாநகர செயலாளர் வேலழகன் மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் தங்களது வாய்யில் வந்த வசனங்களை வீராப்பாக பேசி அசைத்தினர்.  நமது வேட்பாளர் வேலூர் கோட்டையிலிருந்து டில்லி கோட்டை செல்ல உள்ளார். அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்று கூறி மத்தியம் 1 மணி வரை நடந்த கூட்டத்தில் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை மத்தியம் உணவு கொடுக்காமல் விரட்டினர்.
பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்பி வருகின்றனர்.  பல செய்தியாளர்களும் மணி கணக்கில் காத்திருந்து வெறுமன சென்றனர். அதிமுக நிர்வாகிகள் எப்போதும் செய்வது போல் செய்தியாளர்களுக்கு அல்வா கொடுத்தனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!