தமிழகம்

வேலூர் மாவட்டம் ஓட் டேரியில் காங்கிரஸ் மனித உரிமை துறை அலுவலகத்தில் 6 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் விழா

61views
22:12:23 அன்று வேலூர் மாவட்டம் ஓட் டேரியில் காங்கிரஸ் மனித உரிமை துறை அலுவலகத்தில் அதன் தலைவர் W.ஜேம்ஸ் ராஜேந்திரன் தலைமையில் 6 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக திரு.ஏ.எம். முனிரத்தினம் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காங்கிரஸ் கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் தீனா என்கிற தினகரன், காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி.துறை வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டி.நோபல் லிவிங்ஸ்டன், மண்டல தலைவர் வசிஸ்டர், எத்திராஜ்,ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தலைவர் சி. புருஷோத்தமன், அந்தோணி வெண்ணிலா,புரூஸ் லீ முன்னிலை வகித்தனர்.

உடன் தமிழ்ச்செல்வன் டேனியல், லோகநாதன், ராஜசேகர்,திருவலம் குணா,தினேஷ், திவாகர்,முத்து, ஆனந்த் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கி கிறிஸ்மஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து முடிவில் மனித உரிமை துறை தலைவர் ஜேம்ஸ் ராஜேந்திரன் நன்றி உரை கூறினார்.
செய்தியாளர் : D நோபல் லிவிங்ஸ்டன், வேலூர் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!