தமிழகம்

வேலூரில் மாநகர மாவட்ட அதிமுக நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

119views
வேலூர் க்ரீன் சர்கிள் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் 2024 நாடாளுமன்ற அதிமுக மாநகர தேர்தல் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.  மாவட்ட மாநகர செயலாளர் எஸ்ஆர்கே. அப்புதலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசினார்.
இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மகளிர் அணிசெயலாளர், மாவட்ட துணைச்செயலாளர், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுபாஸ், சின்னதுரை, பகுதி செயலாளர் நாராயணன், மாநகர விவசாய அணிசெயலாளர் சுந்தர்ராஜ், அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம், வழக்கறிஞர்கள் பிரிவு, மகளிர் அணி, எம்ஜிஆர் இளைஞர் அணி, மாணவர் அணி, மாநகராட்சி கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வட்ட செயலாளர்கள், கிராம கிளை செயலாளர்கள் என அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  அனைவருக்கும் மதியம் சுடச்சுட மட்டன் பிரியாணி பறிமாறப்பட்டது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!