தமிழகம்

வேலூரில் கலைஞர் நூற்றாண்டுவிழா : அமைச்சர்கள் பங்கேற்பு

84views
வேலூர் தனியார் மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டுவிழா நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சர் கலந்துகொண்டு சிறப்பு மலரினை வெளியிட்டு பேசினார்.  இதில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கைத்தறிதுறை அமைச்சர் காந்தி, வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, வேலூர் மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  திருச்சி கலைக் காவேரி கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!